கொடியது.? கொடியது கேட்கின் நெடியவெவ் வேலோய் கொடிது கொடிது வறுமை கொடிது; அதனினும் கொடிது இளமையில் வறுமை; அதனினும் கொடிது ஆற்றொணாக் கொடுநோய்; அதனினும் கொடிது அன்புஇலாப் பெண்டிர்; அதனினும் கொடிது இன்புற அவர்கையில் உண்பதுதானேஇனியது? இனியது கேட்கின் தனிநெடு வேலோய்! இனிது இனிது ஏகாந்தம் இனிது; அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்; அதனினும் இனிது அறிவினர்ச் சேருதல்; அதனினும் இனிது அறிவுள்ளாரைக் கனவினும் நனவினும் காண்பது தானேபெரியது? பெரியது கேட்கின் எரிதவழ் வேலோய்! பெரிது பெரிது புவனம் பெரிது; புவனமோ நான்முகன் படைப்பு; நான்முகன் கரியமால் உந்தியில் வந்தோன்; கரிய மாலோ அலைகடல் துயின்றோன்; அலைகடல், குறுமுனி அங்கையில் அடக்கம்; குறுமுனியோ கலசத்தில் பிறந்தோன்; கலசமோ அரவினுக்கு ஒருதலைப் பாரம்; அரவோ உமையவள் சிறுவிரல் மோதிரம்; உமையோ இறைவர் பாகத்து ஒடுக்கம்; இறைவரோ தொண்டர் உள்ளத்து ஒடுக்கம்; தொண்டர் தம்பெருமை சொல்லவும் பெரிதே! Tamiltutor.com |