
எம்மை கவர்ந்த கவி பாவேந்தர் பாரதிதாசன்
“கன்னல் பொருள் தரும் தமிழே நீ ஓர் பூக்காடு நானோர் தும்பி!”
என்று தமிழ் காதல் கொண்டு “உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு” என்ற கொள்கையை உயிர் மூச்சாய் பெற்றவர்; தமிழ்ச் சொல்லால் பாடல் இயற்றி, இருபதாம் நூற்றாண்டு கவிதை வானில் ஒளி நிலவாய் பவனி வந்த புரட்சிக் கவிஞராக விளங்கியவர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள்.
அறியாமை இருளில் முடங்கிக் கிடந்தவர்களை பகுத்தறிவு ஒளி பெற்று விழிப்புறச் செய்தார்; கொள்கையற்றவர்கள் ஐ கொள்கை உரம் பெற்று நிமிர்ந்து நிற்கச் செய்தவர் பாவேந்தர் அவர்கள்.
தோற்றம்
தோன்றின் புகழோடு தோன்றுக!
தமிழ்ப்பணி
வொட்டாமல் இனிக்கும் இவரது பாடல் வரிகள் இங்கே உங்களுக்காக.
தமிழுக்கும் அமுதென்று பேர் !-அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர் !
தமிழுக்கு நிலவென்றுபேர்!- இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர் !
தமிழுக்கு மணமென்று பேர் !- இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர் !
தமிழுக்கு மதுவென்று பேர்!-இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர் !
தமிழ் எங்கள் இளமைக்குப் பால்!- இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்!-இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன் !
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்!-இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள் !
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்!- இன்பத்
தமிழ் எங்கள் வலமிக்க உளமுற்ற தீ
பாரதிதாசன் தமிழ்க்கவி தமிழரின் கவி தமிழில் மறுமலர்ச்சிக்காக தோன்றிய கவி அக்கவியின் கவிதைகளை கற்று பயன் பெறுவோமாக அவரது பாடல்களை பாரெல்லாம் பரப்புவோம்.